
அழகான, திகைப்பூட்டும் மற்றும் மர்மமான விஷயங்களை இந்த பூமி உள்ளடக்கியுள்ளது.
இந்த பூமியானது சுமார் 71% நீரால் சூழப்பட்டுள்ளது. இது மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் இன்றியமையாததாக உள்ளது.
அப்படி உலகம் முழுவதும் பரவி கிடக்கும் நீர்நிலைகளில் சில ஆபத்துகளும் இருக்கின்றன.
அப்படி உலகின் மிக ஆபத்தான நீர்நிலைகள் குறித்து மெய்சிலிர்க்க வைக்கும் தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள கிவு ஏரி உலகின் மிக ஆபத்தான ஏரிகளில் ஒன்றாகும்.
இது ‘வெடிக்கும் ஏரி’ என்றும் அழைக்கப்படுகிறது. அதன் நீரில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன் வாயு உள்ளது. இந்த ஏரிக்கு அருகில் லேசான பூகம்பம் ஏற்பட்டால், ஏரியில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இந்த ஏரி இயற்கை அழகுடன் காட்சியளிக்கிறது. ஆனால் அதன் பிளவுகளில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு ஏரியைச் சுற்றி செல்லும் மனிதர்களின் உயிரை காவு வாங்கி விடுகிறது.
வட அமெரிக்க கண்டத்தின் கரீபியன் பகுதியில் அமைந்துள்ள ஒரு இடம் தான் டொமினிகா. இங்கு இருக்கும் ஏரியில் உள்ள நீர் 180 முதல் 197 °F (82-92 °C) வரை வெப்பமயமாகிறது.
இது எரிமலைக்கு அருகாமையில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் எப்போதும் தண்ணீர் சூடாகவே இருக்குமாம். இங்கு சுற்றுலா பயணிகள் ஏரியில் இறங்கவும் நீச்சல் அடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான ‘மிச்சிகன் ஏரி’ அழகாக இருப்பது போலவே ஆபத்தானதாகவும் இருக்கிறது.
இது ஒரு பெர்முடா முக்கோணம் போல செயல்படுகிறது. ஏனெனில் ஏரியின் மீது பறக்கும் விமானங்கள் விபத்துக்குள்ளாகின்றன. நீரோட்டங்களின் திடீர் மாற்றங்கள் காரணமாக விபத்துக்கள் ஏற்படுகின்றன என்று சில நிபுணர்கள் கூறுகிறார்கள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust