
மெட்ரோவில் செல்லும்போது தனக்கு அமர இருக்கை கிடைக்காததால், எங்கு சென்றாலும் கையோடு சோபாவை தூக்கி செல்கிறார் சீனாவை சேர்ந்த நபர் ஒருவர்.
இவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொது போக்குவரத்துகளில் பயணிக்கும்போது தவிர்க்கமுடியாத ஒன்று கூட்ட நெரிசல். இந்த நெரிசலில் சிக்கி நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு முழுதாக சென்று சேருவதே பெரும்பாடாக இருக்கும். அப்படி இருக்கையில், நாம் உட்கார்ந்துகொள்ள இடம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது பேராசை தான்.
எனினும், நீண்ட தூரம் பயணிக்கிறோம் என்றால், கொஞ்ச நேரம் அமர கால்கள் கெஞ்சும். பயணிக்கும்போது அமர்ந்துகொண்டு அமைதியாக அந்த பயணத்தை ரசிக்கவேண்டுமென நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லை.
ஆனால், உட்கார சீட் கிடைக்காததால் சற்று வித்தியாசமாக யோசித்திருக்கிறார் சீனாவை சேர்ந்த இளைஞர் ஒருவர்.
எப்போது மெட்ரோ அல்லது ரயிலில் பயணித்தாலும், தனக்கென்று ஒரு சிங்கிள் சோபாவை கையோடு எடுத்து செல்கிறார் அவர்.
டிரெயின் வருவதற்காக பிளாட்ஃபாரத்தில் காத்திருக்கும்போதும் அந்த சோபாவில் அமர்ந்து காத்திருக்கிறார். கையில் ஒற்றை சோபாவுடன் இவர் மெட்ரோவில் வலம் வரும் புகைப்படங்கள் கவனத்தை பெற்றுவருகிறது.
வீட்டிலுருந்து அலுவலகத்துக்கு செல்லும்போது தனக்கு சீட் கிடைக்காததால் இவ்வாறு செய்ய தொடங்கியதாக அவர் தெரிவிக்கிறார். மேலும் உள்ளூர் டிசைனரை அணுகி, போர்ட்டபிள் சோபாவை தயாரித்துக்கொண்டுள்ளார்
பாதுகாவலர்கள் எப்படி இதனை உள்ளே எடுத்துசெல்ல அனுமதித்தனர் என்று கேட்டபோது, தனது நிலையை விளக்கி சிறப்பு அனுமதி பெற்றதாக கூறுகிறார் அந்த இளைஞர்.
எனினும் நெரிசல் குறைவாக இருக்கும் நேரமாக பார்த்து தான் அந்த நபர் மெட்ரோவில் பயணிக்கிறார். தன்னால் வேறு யாருக்கும் இடைஞ்சல் வந்துவிடக் கூடாது என்று இவ்வாறு பயணிக்கிறார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust