
வேலையில்லாமல் தனிமையில் இருந்த பெண், அவசர உதவி எண்ணுக்கு 2761 போலியான அழைப்புகளை விடுத்துள்ளார். ஜப்பானில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
அந்த பெண் யாருடைய கவனத்தையாவது ஈர்க்க வேண்டும் என்ற முனைப்பில் இதனைச் செய்துள்ளார். ஹிரோகோ ஹடகாமி என்ற அந்த 51 வயது பெண் இதற்காக கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
உள்ளூர் தீயணைப்புத் துறையினர் கடமையை செய்யவிடாமல் இடையூறு செய்ததற்காக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறையும் கால் செய்து தொல்லை தரும் அவர், "நான் தனிமையாக இருக்கிறேன். நான் சொல்வதை கேட்கவும் என்னை கவனிக்கவும் யாராவது வேண்டும்" எனக் கூறுவாராம்.
கடந்த 2020 ஆகஸ்ட் முதல் அந்த பெண்மணி கால் செய்து வருகிறாராம். ஒவ்வொரு முறையும், "எனக்கு வயிறு வலிக்கிறது", "நான் அதிக டோஸ் மாத்திரைகளை உட்கொண்டுவிட்டேன்" அல்லது "என் நுரையீரல் வலிக்கிறது" எனக் காரணங்களைச் சொல்வாராம்.
அவரது வீட்டுக்கு ஆம்புலன்ஸ் சென்றதும், "நான் ஆம்புலன்ஸை அழைக்கவில்லையே" என சொல்லி அனுப்பிவிடுவாராம். ஒது தொடர்ந்து நடைபெறவே அங்குள்ள காவல்துறையினர் ஹடகாமியை பல முறை எச்சரித்துள்ளனர். ஆனாலும் அவர் கேட்டுக்கொள்ளாததால் இப்போது கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
2013ம் ஆண்டு இதேப்போல 6 மாதத்தில் 15,000 முறை கால் செய்த 44 வயது பெண்மணி கைது செய்திருக்கின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust