உங்களுக்கு விருப்பான உணவை ஆர்டர் செய்து விட்டு அதை பெறுவதற்காக காத்திருக்கும் நொடிகள் உண்மையில் அற்புதமானவை.
வாயில் எச்சில் ஊற நீங்கள் காத்திருந்து இறுதி வரை அந்த உணவு உங்கள் கைக்கு கிட்டவில்லை என்றால் எப்படியிருக்கும். இங்கு ஒருவருக்கு அது தான் நடந்திருக்கிறது. அதிலும் மோசமாக அவர் உணவை வேறு யாரோ சாப்பிடவும் செய்திருக்கின்றனர்.
இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அவர் பகிர்ந்தது வைரலாகி வருகிறது.
அந்த பயனரின் உணவை டெலிவரி ஏஜன்டே சாப்பிட்டுள்ளார். அது மட்டுமின்றி அந்த உணவு சுவையாக இருந்ததாக ஆர்டர் செய்தவருக்கு மெஸ்சேஜ் செய்து வெறுப்பேற்றியுள்ளார்.
பிரிட்டீஷ் உணவு டெலிவரி செயலியான டெலிவர்டூ என்ற தளத்தில் டெலிவரி ஏஜன்ட் மற்றும் வாடிக்கையாளருக்கு இடையிலான உரையாடல் ஸ்கிரீன் ஷாட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், ஏஜன்ட் "சாரி" என மெஸ்சேஜ் செய்ய "என்ன நடந்தது" என்று வாடிக்கையாளர் கேட்கிறார். அப்போது டெலிவரி ஏஜென்ட் "சாப்பாடு மிகவும் சுவையாக இருந்தது" "நான் அதைச் சாப்பிட்டுவிட்டேன்" "நீங்கள் டெலிவர்டூ நிறுவனத்தில் புகாரளிக்கலாம்" எனக் கூறியுள்ளார்.
வடிக்கையாளர் "நீ மிகவும் மோசமானவன்" என கோவப்பட டெலிவரி ஏஜன்ட் "எனக்கு கவலை இல்லை" எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து டெலிவரி நிறுவனம் நடவடிக்கை எடுத்ததாக பதிவில் கூறப்படவில்லை. இணையவாசிகள் தங்களுக்கும் இது போன்ற சம்பவங்கள் நடந்திருப்பதாக புலம்பி வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust