
தமிழ்நாட்டின் மிகப்பெரிய பண்டிகையாக, பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பொதுவாக விவசாய அறுவடை திருவிழாவாகத்தான் பொங்கல் கொண்டாடப்படுகிறது. நான்கு நாள் திருவிழாவாக பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு ஜனவரி 15 முதல் ஜனவரி 18 வரை கொண்டாடப்படுகிறது.
நான்கு நாள் திருவிழா, அதாவது போகிப் பொங்கல், சூரியப் பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என்று அழைக்கப்படுகின்றன.
சூரிய கடவுளுக்கு பால் சாதம் வழங்குதல், காளைகளை அடக்கும் விளையாட்டான ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு மரபுகள் இந்த கொண்டாட்டத்தின் போது இடம்பெறுகின்றன.
வெளியூரில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு இந்த பண்டிகையின் போது மக்கள் திரும்பிவிடுவார்கள். எங்கு இருந்தாலும் இந்த பண்டிகை நம்மை ஊருக்கு வந்து சேர்த்து விடும். தமிழ்நாட்டில் அதுவும் குறிப்பாக தென்மாவட்டங்களில் கோலாகலமாக இந்த பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையின் போது நீங்கள் தமிழ்நாட்டில் இந்த இந்த மாவட்டங்களுக்கு சென்று பார்த்து வாருங்கள் , நிச்சயம் கொண்டாடங்களுக்கு பஞ்சமே இருக்காது.
பொங்கல் சமயத்தில் தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்கள் இங்கே.
பொங்கல் பண்டிகையின் மொத்த கொண்டாட்டங்களையும் அனுபவிக்க சிறந்த இடங்களில் ஒன்று இந்த மதுரை.
அங்குள்ள கோயில்களில் சிறப்பு சடங்குகள் நடைபெறும். விவசாயிகள் தங்கள் அறுவடை செய்யப்பட்ட பொருட்களை அர்பணித்து சூரிய பகவானை வணங்குவார்கள்.
இந்த நகரம் முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டும். இதில் கிராமப் பயணங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் பொங்கல் உணவு மற்றும் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டு என பார்க்க அவ்வளவு விஷயங்கள் உள்ளன.
புகழ்பெற்ற மீனாட்சி கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மற்றும் கூடல் அழகர் கோயில் ஆகியவை மதுரையில் பார்க்க வேண்டிய மற்ற இடங்களாகும்.
பொங்கல் உற்சாகத்தில் மூழ்க விரும்புவோருக்கு தஞ்சாவூர் மற்றொரு சிறந்த இடமாகும். இங்கு, வண்ணமயமான அலங்காரங்கள் மற்றும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வீடுகளை நீங்கள் காணலாம்.
மேலும் தமிழ்நாடு சுற்றுலாத் துறையால் நடத்தப்படும் பொங்கல் சுற்றுலாத் திருவிழாவில் நீங்கள் பங்கேற்கலாம். இந்த நிகழ்வில் பாரம்பரிய விளையாட்டுகள், மாட்டு வண்டி சவாரிகள் மற்றும் நாட்டுப்புற நடனங்கள் ஆகியவை அடங்கும்.
நீங்கள் தஞ்சாவூரில் இருக்கும் போது, மாட்டுப் பொங்கல் விழாவைக் காண பிரகதீஸ்வரர் கோவிலுக்குச் செல்லுங்கள், அங்கு பசுக்களுக்கு வழிபாடுகள் நடைபெறும். தஞ்சாவூர் அரச மாளிகை, கங்கைகொண்டசோழபுரம் கோயில் மற்றும் ஐராவதேஸ்வரர் கோயில் ஆகியவை தஞ்சாவூரில் உள்ள மற்ற பிரபலமான சுற்றுலா தலங்களாகும்.
பொங்கல் பண்டிகையின் போது செல்ல வேண்டிய மற்றொரு நகரம் சேலம், குறிப்பாக அதன் தனித்துவமான பாரம்பரியமான 'நரி தரிசனம்'.
கிராமவாசிகள் அருகிலுள்ள காடுகளில் இருந்து ‘வங்கா நரி’யை பிடித்து "நரி பொங்கல்" நடத்துவார்கள்.
சேலத்தில் கோட்டை மாரியம்மன் கோயில், கரிய மாணிக்கம் அரசு அருங்காட்சியகம், சேலம் எஃகு ஆலை உள்ளிட்ட பல அழகான கோயில்கள் மற்றும் பிற கலாச்சார இடங்கள் உள்ளன.
இறுதியாக, பொங்கலின் போது தமிழ்நாட்டிற்கு எந்தப் பயணமும் கோயம்புத்தூருக்குச் செல்லாமல் முழுமையடையாது.
அங்கு நீங்கள் பாரம்பரியமான "கம்பாலா" பந்தயத்தைக் காணலாம். இதில் காளைகள் சேற்று வயல்களில் ஓட விட்டு அதன் வலிமையை சோதிப்பார்கள்.
கோவையில் பேரூர் பட்டீஸ்வரர் கோயில், மருதமலை கோயில், சிறுவாணி அணை உள்ளிட்ட பல அழகிய இடங்கள் உள்ளன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust