
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் 2021 தேர்தலில் வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா மாரடைப்பால் இறந்ததை அடுத்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், திமுக கூட்டணி வேட்பாளரான EVKS இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், அதிமுக வேட்பாளரை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சட்டமன்றத் தேர்தலை போல இந்த முறையும் மதுரை எய்ம்ஸ் எங்கே? என்ற கேள்வியுடன் செங்கலை காண்பித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் அவருக்கு போட்டியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் செங்கலை எடுத்து கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.
30 திமுக அமைச்சர்களை எதிர்த்து தொண்டர்கள் களத்தில் பணியாற்றி வருகிறோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவை தமிழ்நாடே எதிர்பார்த்துக் கொண்டிருகிறது.
எனக்கும் உதயநிதிக்கும் வித்தியாசம் இருக்கிறது.
நான் வைத்திருப்பது எய்ம்ஸ் செங்கல் அல்ல, தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்ட, இதுபோல் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட செங்கல் கொடுத்துள்ளோம்.
11 மருத்துவக் கல்லூரியில் 1800 மருத்துவ சீட்டில் ஏழை எளிய மாணவ மாணவிகள் படிக்க காரணமாக இருப்பது நான் வைத்திருக்கும் செங்கல் தான்.
2009 -ல் தர்மபுரியில் திமுக ஆட்சிக்கு வந்தால், சிப்காட் அமைப்போம் என்ற வாக்குறுதி அளித்து இன்னும் அங்கு ஒரு செங்கலையும் காணோம், 16 ஆண்டுகளுக்கு பிறகும் அங்கு எதுவும் அமைக்கப்படவில்லை, அதனால் தான் இதை பார்சல் அனுப்ப போகிறேன் என்றார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust