IPL போட்டிகளில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்களில் வெகு சிலருக்கே இந்தியாவில் பெரிய அளவிலான ரசிகர் பட்டாளம் கிடைக்கும். அப்படிப்பட்ட ரசிகர்களை பெற்றவர் தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் கீரன் பொல்லார்ட்.
தற்போது ஐபிஎல்-ல் இருந்து ஓய்வு பெறுவதாக பொல்லார்ட் அறிவித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஐபிஎல் வரையிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார் பொல்லார்ட். அவர் இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.
கடந்த 13 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல்-ல் விளையாடி வருகிறார் பொல்லார்ட். இதுவரை 189 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 3412 ரன்கள் எடுத்திருக்கிறார். 69 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஐபிஎல்-லின் சிறந்த ஆல்ரவுண்டர்கள் வரிசையில் நிச்சயம் இவர் பெயர் இடம் பெறும்.
தன்னுடைய ஓய்வு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட பொல்லார்ட், தன்னால் மும்பை அணிக்கு எதிராக விளையாட முடியாது என்பதால் ஓய்வு பெறுவதாக கூறினார்.
ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பெயர்களை இன்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
மும்பை இந்தியன்ஸ் ஃப்ரான்சைஸியின் உரிமையாளர்களான முகேஷ் அம்பானி, நிதா அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார் பொல்லார்ட்.
"Once an MI always an MI" எனக் எழுதியுள்ள அவர், ஐபிஎல்லின் சிறந்த அணியுடன் செயல்பட்டது குறித்து பெருமைக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
2010 முதலே வேறேந்த அணியிலும் பொல்லார்ட் விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2023 ஐபிஎல்-ல் இருந்து மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக கீரன் பொல்லார்ட் செயல்படுவார் எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்து பொல்லார்ட் ஓய்வு பெற்றார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust