
நவீன காலத்திலும் கூட, மரங்கள் கொண்டாடப்பட்டு தான் வருகின்றன.
இதற்கு ஒரு தனித்துவமான உதாரணம் மேற்கு வங்கத்தில் தன் குழந்தையைப் போல ஒரு மரத்தை வளர்த்து திருமணம் செய்து வைத்த கதை.
மேற்கு வங்கத்தில் உள்ள மேமாரி என்ற நகரத்தில், கிராம மக்கள் சிறப்பு திருமணத்தில் பங்கேற்றுள்ளனர். அது என்ன சிறப்பு திருமணம் என்று யோசிக்கிறீர்களா?
ஆலமரத்தை மகன் போன்று வளர்த்ததால் அதற்கு திருமண ஏற்பாடுகள் செய்துள்ளார் ரேகா தேவி என்ற பெண்.
ரேகா தேவி இந்த மரத்தை தனது சொந்த குழந்தையைப் போல நேசித்திருக்கிறார். அதனால் அதற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணியுள்ளார்.
இது குறித்து ரேகா கூறுகையில்,
திருமணத்திற்கு நண்பர்களையும் அக்கம்பக்கத்தினரையும் அழைத்தேன். பாரம்பரியத்தின் படி, பூசாரி மரத்திற்கு புடவை-வேட்டியை உடுத்தி, அதன் உச்சியில் வர்ணம் பூசினார்
அன்று மாலை ஆலமரத்தின் பிரம்மாண்ட திருமணத்தைக் காண ஏராளமான உள்ளூர்வாசிகள் கூடினர். அந்த மரத்தை தன் குழந்தையாக வளர்த்து வந்த ரேகாதேவி, அதற்கு திருமணம் நடைபெறுவதைக் கண்டு நெகிழ்ச்சியடைந்தனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust