திருச்சூர் பூரம்: தொடங்கியது கேரளாவின் பாரம்பரிய திருவிழா - சிறப்பு என்ன? | Video

கேரளாவின் கலாச்சாரம், பாரம்பரியம், நூற்றாண்டுகால பழக்கவழக்கங்களை பறைசாற்றும் விழாவில், செண்ட மேளங்களும், பஞ்ச வாத்தியங்களும் இசைக்கப்படும். அலங்கரிக்கப்பட்ட குடைகள், அம்பாரிகளுடன் யானைகள் வரிசைக்கட்டி நிற்க, செண்ட மேளம் வாசிக்கும்போது திருவிழா களைக்கட்டும்.
திருச்சூர் பூரம்: தொடங்கியது கேரளாவின் பாரம்பரிய திருவிழா - சிறப்பு என்ன? | Video
திருச்சூர் பூரம்: தொடங்கியது கேரளாவின் பாரம்பரிய திருவிழா - சிறப்பு என்ன? | VideoTwitter

வரலாற்று சிறப்புமிக்க திருச்சூர் பூரம் விழா கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி தொடங்கியது. திருவிழாவை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் வடக்குநாதன் கோவிலில் குவிந்தனர்.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவின் சிறப்பே திருவம்பாடி மற்றும் பரமேக்காவு கோவில்களின் பரஸ்பர போட்டிகள் தாம்.

இரு கோவில்களின் யானைகளும் எவ்வாறு அலங்கரிக்கப்பட்டுள்ளன, யாருடைய யானை அழகாக இருக்கிறது, யாரிடம் அதிக எண்ணிக்கையில் அலங்கரிக்கப்பட்ட யானைகள் இருக்கின்றன போன்றவை என்பது பார்க்கப்படும்.

இதனை கண்டுகளிக்க பல்வேறு இடங்களில் இருந்தும் மக்கள் குவிகின்றனர்.

இந்த ஆண்டும், திருவிழாவுக்கு குறைந்தது 10 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இத்திருவிழா, ஆசியாவின் மிக பிரம்மாண்டமான திருவிழாவாக மாறும்.

கேரளாவின் கலாச்சாரம், பாரம்பரியம், நூற்றாண்டுகால பழக்கவழக்கங்களை பறைசாற்றும் இவ்விழாவில், செண்ட மேளங்களும், பஞ்ச வாத்தியங்களும் இசைக்கப்படும். அலங்கரிக்கப்பட்ட குடைகள், அம்பாரிகளுடன் யானைகள் வரிசைக்கட்டி நிற்க, செண்ட மேளம் வாசிக்கும்போது திருவிழா களைக்கட்டும்.

திருச்சூர் பூரம்: தொடங்கியது கேரளாவின் பாரம்பரிய திருவிழா - சிறப்பு என்ன? | Video
’வாவ்... க்யூட்’ - பெண் வேடமிட்டு கடவுளை வழிபடும் விநோத திருவிழா: வைரல் புகைப்பட பின்னணி?

ஆண்டு தோறும் மலையாள மாதமான மேடம் மாதத்தில் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இது ஆங்கில காலண்டரில், ஏப்ரல் - மே மாதங்களில் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு திருச்சூர் பூரம் திருவிழா ஏப்ரல் 30 அன்று தொடங்கியது. வழக்கமாக நடைபெறுவது போல இந்த ஆண்டும், குடமோட்டம் எனப்படும் குடை மாற்றும் சடங்கு, வானவேடிக்கைகள் வெடிப்பது, சுமார் 100 யானைகளின் ஊர்வலம் இருக்கும்.

திருச்சூர் பூரம், அனைத்து பூரங்களிலும் முதன்மையானதாகவும், முக்கியமானதாகவும் கருதப்படுகிறது.

திருச்சூர் பூரம்: தொடங்கியது கேரளாவின் பாரம்பரிய திருவிழா - சிறப்பு என்ன? | Video
வியட்நாமில் மாரியம்மன் கோவில் இருக்கா? வியக்க வைக்கும் வரலாறு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com