
ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு நாம் செல்ல பாஸ்போர்ட் பெற வேண்டியது கட்டயாம் ஆகும்.
பாஸ்போர்ட் இல்லாமல் நாம் இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு கூட செல்ல முடியாது.
இந்தியாவில் நான்கு வகையான பாஸ்போர்ட் உள்ளன. அதாவது சாதாரண / வழக்கமான பாஸ்போர்ட், டிப்ளமேடிக் பாஸ்போர்ட் / அஃபீஷியல் பாஸ்போர்ட் , ஆரஞ்சு பாஸ்போர்ட் மற்றும் வொய்ட் பாஸ்போர் என்று 4 வகை பாஸ்போர்ட்கள் உள்ளன.
அவற்றின் பயன்கள் என்னென்ன என்பது குறித்து இங்கே காணலாம்.
இது சாதாரண மனிதனின் பாஸ்போர்ட். இந்த நீல நிற பாஸ்போர்ட் சாமானியர் மற்றும் உயர் பதவிகளை வகிக்கும் இந்திய அரசு அதிகாரிகளை வேறுபடுத்தி அறிய உதவுகிறது.
இந்த பாஸ்போர்ட்கள் இந்திய தூதர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படுகின்றன.
அத்தகைய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது பல்வேறு சலுகைகளுக்கு தகுதி பெறுகின்றனர்.
2018 ஆம் ஆண்டு முதல் இந்தியக் குடிமக்களுக்கு இந்த பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்தியது அரசு.
இது மற்ற பாஸ்போர்ட்டுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகத் தெரிகிறது.
இது 10 ஆம் வகுப்புக்கு அப்பால் படிக்காதவர்களைக் கண்டறியும் வகையில் உள்ளது.
வழக்கமான பாஸ்போர்ட்டைப் போலல்லாமல், இந்த பாஸ்போர்ட்டில் அனைத்து முக்கியமான விவரங்களையும் குறிப்பிடும் கடைசிப் பக்கம் இருக்காது. கல்வித் தகுதி இல்லாத இவர்கள் ECR (Emigration Check Required) பிரிவின் கீழ் வருவார்கள்.
இந்திய அரசு அதிகாரிகள் மட்டுமே வெள்ளை நிற பாஸ்போர்ட் பெற தகுதியுடையவர்கள். வேலைக்காக வெளிநாடு செல்லும் உரிமையாளருக்கு இது வழங்கப்படுகிறது.
இதனால் சுங்க அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகளை அடையாளம் கண்டு அதற்கேற்ப அவர்களை நடத்துவது எளிதாக இருக்கும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust