
தனது கணவன் விட்டுச் சென்ற பிறகு மகனை ராணுவ அதிகாரியாக்குவதற்காக இ-ரிக்ஷாவை ஓட்டும் இளம்பெண்ணின் வைராக்கியத்தை கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.
மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரத்தில் 38 வயதான ஜோதி என்பவர் இ-ரிக்ஷா ஓட்டி வருகிறார். கணவன் பிரிந்து சென்ற பிறகு மகனை காப்பாற்ற போராடினார். வறுமை அவரை துரத்த இந்த வேலையை செய்ய முடிவெடுத்தார்.
அதற்காக ஜோதி அவரது நகையை விற்று இ-ரிக்ஷா வாங்கினார். மகனை ஒரு ராணுவ அதிகாரியாக்க வேண்டுமென்பது ஜோதியின் கனவு. அதற்காக பல தடைகளை கடந்து வருகிறார்.
ஜோதி வர்மா தனது போராட்டம் குறித்து கூறுகையில்,
சுற்றி இருப்பவர்கள் என்னை கேலி செய்கிறார்கள், ஆனாலும், நான் மன உறுதியோடு இந்த வேலையை செய்து வருகிறேன்.
என்னையும் மகனையும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு என் கணவர் பிரிந்து விட்டார். அதன் பிறகு எனது குழந்தையின் வாழ்வாதாரத்திற்காக இட்லி தோசைக்கான சிறிய கடையை அமைத்தேன்.
ஆனால் அதில் நிறைய சிக்கல்கள் இருந்தன. அதனால் இறுதியாக நான் இ-ரிக்ஷாவை ஓட்ட ஆரம்பித்தேன். அவர் தினமும் வான் விஹார் மற்றும் போபாலின் லேக் வியூ பகுதியில் ரிக்ஷா ஓட்டுகிறார்
”எனது 11 வயது மகன் பள்ளி முடிந்து வரும்போது இந்த ரிக்ஷாவிலேயே பாடம் சொல்லிக் கொடுப்பேன்.
இரவும் பகலும் உழைக்கிறேன். என் மகன் ராணுவ அதிகாரியாக வேண்டும் அதற்காக எத்தனை தடைகளையும் ஏற்க தயார்” என்றார் ஜோதி.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust