ராஜ்பாத் முதல் அலகாபாத் வரை - இந்திய நகரங்களுக்கு பெயர்மாற்றப்பட்டது ஏன்?

முகலாய பேரரசர்கள் பெயரிடப்பட்ட நகரங்களின் பெயர்களை மாற்றியமைக்கும் இந்த நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கம் முகலாய வரலாற்றை அழிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
Indian places renamed recently - here the list
Indian places renamed recently - here the listTwitter

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழைய இடங்கள் மற்றும் நகரங்களின் பெயர் மாற்றம் இந்திய அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தினாலும், சமீபத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட சில முக்கிய இடங்கள் குறித்து இங்கே பார்ப்போம்.

அவுரங்காபாத் டு சத்ரபதி சாம்பாஜி நகர்

சமீபத்தில், உள்துறை அமைச்சகம் மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மற்றும் உஸ்மானாபாத் நகரங்களின் பெயர்களை மாற்றுவதற்கு ஆட்சேபனை இல்லை என்று கூறி சத்ரபதி சம்பாஜி நகர் மற்றும் தாராஷிவ் என பெயர் மாற்ற ஒப்புதல் அளித்தது.

முகலாய பேரரசர்களின் பெயரிடப்பட்ட நகரங்களின் பெயர்களை மாற்றியமைக்கும் இந்த நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கம் முகலாய வரலாற்றை அழிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

ராஜ்பாத் டு கர்தவ்ய பாத்

செப்டம்பர் 8, 2022 அன்று நடைபெற்ற சென்ட்ரல் விஸ்டா அவென்யூ திறப்பு விழாவில் டெல்லியின் சின்னமான ராஜ்பாத்தின் பெயரை கர்தவ்யா பாத் என்று மாற்ற இந்திய அரசு முடிவு செய்தது.

இதற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், புது டெல்லி முனிசிபல் கவுன்சில் (NDMC) இந்த பெயரை மாற்றுவதற்கான ஒப்புதல் அளித்தது.

அலகாபாத் டு பிரயாக்ராஜ்

உத்தரபிரதேச அரசு, 2018 அக்டோபரில் வரலாற்று சிறப்புமிக்க அலகாபாத்தின் பெயரை பிரயாக்ராஜ் என்று மாற்றியது. மாநில அமைச்சரவை இது தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியது.

பதிவுகளின்படி, இந்த நகரம் 16 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் பிரயாக் என்று அழைக்கப்பட்டது, அதன் பின்னர் முகலாய பேரரசர் அக்பரால் மறுபெயரிடப்பட்டதாக கூறப்படுகிறது.

Indian places renamed recently - here the list
மாயன் நாகரீகம்: மழைக்காடுகளுக்கு கீழே புதைந்திருக்கும் 2000 ஆண்டுகள் பழமையான நகரம்- எங்கே?

முகலாய தோட்டம் டு அம்ரித் உத்யன்

டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனின் அடையாளமாக விளங்கும் முகலாய தோட்டம், அம்ரித் உத்யன் என மறுபெயரிடப்பட்டுள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையும், காலனித்துவத்திலிருந்து வளர்ச்சிக்கான போராட்டத்தையும் குறிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் மாளிகை மறுபெயரிடப்பட்டுள்ளது.

முகல்சராய் ரயில் நிலையம் டு பண்டிட் தீனதயாள் உபாத்யாயா சந்திப்பு

முன்பு முகல்சராய் நிலையம் என்று அழைக்கப்பட்ட இது கிழக்கு இந்தியாவின் நுழைவாயில் என்றும் அறியப்பட்டது. கிழக்கிந்திய இரயில்வே இந்த ரயில் நிலையத்தை கல்கத்தாவிலிருந்து டெல்லியை இணைக்கும் வகையில் கட்டியது.

இந்த பாதை முகலாய காலத்தில் இருந்து, கிழக்கு மற்றும் வட இந்தியாவை இணைக்கும் மிகவும் பரபரப்பான நடைபாதைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது பண்டிட் தீனதயாள் உபாத்யாயா சந்திப்பு என்று மறுபெயரிடப்பட்டுள்ளது.

Indian places renamed recently - here the list
பாம்பே டு மும்பை: பெயர் மாற்றப்பட்ட நகரம் - உண்மைக் காரணம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com