
ரயில் டிக்கெட் குறித்து சோசியல் மீடியாவில் பரவும் தகவல் குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
நம்மில் பலரும் கடைசி நிமிடத்தில் சென்று பஸ் அல்லது ரயில் புடிக்கும் பழக்கம் இருக்கும். சிலரோ ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக ரயில்வே நிலையம் சென்று விடுவார்கள்.
காரணம் சரியான நேரத்தில் ரயிலை பிடித்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக, ஆனால் அப்படி லேட்டாக ரயில் நிலையத்திற்கு வந்தால் நம்முடைய இருக்கை வேறு ஒரு ஆளுக்கு ஒதுக்கி விடுவார்களா?
ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட 10 நிமிடங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட இருக்கைக்கு வரவில்லை என்றால், அந்த குறிப்பிட்ட பயணியின் இருக்கையை வேறு ஒருவருக்கு பயண டிக்கெட் பரிசோதகரால் (TTE) ஒதுக்கிடுவார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இந்த தகவல் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியதையடுத்து ரயில்வே அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
இது போன்ற எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாத செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.
ஒருவர் 10 நிமிடங்களுக்குள் ரயில் இருக்கைக்கு வரவில்லை என்றால், அவரது இருக்கை வேறு ஒருவருக்கு ஒதுக்கப்படும் என்கிற செய்தி பொய்யானது என்றும் இது குறித்த, எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் ரயில்வே துறையில் இருந்து வெளியிடப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டிக்கெட் பரிசோதகர் உங்கள் இருக்கைக்கு வந்த 10 நிமிடங்களுக்குள் உங்கள் இருப்பை தெரிவிக்க வேண்டுமே தவிர, நீங்கள் 10 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும் என்பதல்ல.
எனவே, பொய்யான தகவல்கள் குறித்து யாரும் அச்சம் அடைய வேண்டாம் என்று ரயில்வே அதிகாரி கூறியுள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust