"டூ டூ டூ டூ" டைம்டேபிள் போட்டு இரண்டு மனைவிகளுடன் வாழும் நபர்; சண்டே மட்டும் லீவு- எங்கே?

முதல் மனைவி மற்றும் குழந்தையுடன் வாரத்தின் முதல் மூன்று நாட்களான திங்கள் முதல் புதன் வரை குடும்பம் நடத்த வேண்டும். வியாழன் முதல் சனிக்கிழமை வரை இரண்டாம் மனைவி மற்றும் மகளுடன் இருக்க வேண்டும். சண்டே ஒரு நாள் மட்டும் இவர் ஜாலியாக இவரது விருப்பம் போல் வாழ்ந்துகொள்ளலாம் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
Madhya Pradesh: டைம்டேபிள் போட்டு இரண்டு மனைவிகளுடன் வாழும் நபர் - சண்டே மட்டும் லீவு
Madhya Pradesh: டைம்டேபிள் போட்டு இரண்டு மனைவிகளுடன் வாழும் நபர் - சண்டே மட்டும் லீவு canva

வாரத்தின் முதல் மூன்று நாள் முதல் மனைவியுடன்...அடுத்த மூன்று நாள் இரண்டாம் மனைவியுடன்... ஞாயிற்றுக் கிழமை ஒரு நாள் மட்டும் லீவ்...இப்படி டைம்டேபிள் போட்டு தன் இரண்டு மனைவிகளுடன் குடும்பம் நடத்திவருகிறார் குருகிராமை சேர்ந்த நபர் ஒருவர்.

ஹரியானா மாநிலம் குருகிராமில் பணியாற்றி வருகிறார் இந்த பெயர் குறிப்பிடப்படாத பொறியாளர். இவர் சீமா என்ற பெண்ணை கடந்த 2018 ஆம் ஆண்டு மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான்.

2020 ஆம் ஆண்டு பெருந்தொற்று ஏற்பட்டதில் தான் இவரது வாழ்க்கை மாறியிருக்கிறது.

கொரோனா காலத்தில் முழுமுடக்கம் இருந்ததால், மனைவி மற்றும் மகனை தனது மாமியார் வீட்டில் விட்டுவந்தார். அப்போது தனியே வாழ்ந்த கணவர் தன்னுடன் பணிப்புரியும் பெண்ணுடன் திருமணம் மீறிய உறவில் இருந்து வந்துள்ளார்.

நாளடைவில் இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கி, பின்னர் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

கணவரின் இரண்டாம் திருமணம் பற்றி அறிந்த சீமா, கணவர் மீது வழக்கு பதிவு செய்து, தனது மகனை வளர்க்க தேவைப்படும் செலவை ஏற்குமாறு கேட்டிருந்தார்.

Madhya Pradesh: டைம்டேபிள் போட்டு இரண்டு மனைவிகளுடன் வாழும் நபர் - சண்டே மட்டும் லீவு
”Fortuner கார் வேண்டும்”- கார் தர மறுத்ததால் திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை- எங்கே?

ஆனால் பணம் வழங்க கணவர் தயாராக இல்லை. இவர்களுக்குள் வாக்குவாதங்கள் முற்றியது. முதல் மனைவியிடம் வேறு வழியை பார்த்து கொள்ள கணவர் கூறிவிட்டார்

அப்போது இவர்கள் இருவருக்கும் கவுன்செல்லிங் சென்றனர். விவாகரத்து பெறுவதற்கு பதிலாக ஒரு வித்தியாசமான நிபந்தனை ஒன்று கணவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அந்த மனிதர் முதல் மனைவி மற்றும் குழந்தையுடன் வாரத்தின் முதல் மூன்று நாட்களான திங்கள் முதல் புதன் வரை குடும்பம் நடத்த வேண்டும். வியாழன் முதல் சனிக்கிழமை வரை இரண்டாம் மனைவி மற்றும் மகளுடன் இருக்க வேண்டும்.

சண்டே ஒரு நாள் மட்டும் இவர் ஜாலியாக இவரது விருப்பம் போல் வாழ்ந்துகொள்ளலாம் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இதனால் அவர் டைம்டேபிள் போட்டுக் கொண்டு இரண்டு மனைவிகளுடனும் வாழ்ந்து வருகிறார்.

Madhya Pradesh: டைம்டேபிள் போட்டு இரண்டு மனைவிகளுடன் வாழும் நபர் - சண்டே மட்டும் லீவு
”மாப்பிள்ளை கருப்பாக இருக்கிறார்” - கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் - எங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com