மோடிக்கு நோபல் பரிசு என பரவிய வதந்தி - உண்மை என்ன? Asle Toje என்ன பேசினார்? | Fact Check

நோபல் கமிட்டியின் துணைத்தலைவர் நான். பொய்யான செய்தி, ட்வீட் ஒன்று பகிரப்பட்டு வருகிறது. அந்த செய்தியில் இருப்பது போன்று எதையும் நான் சொல்லியிருக்கவில்லை. அதைப்பற்றி மேலும் மேலும் பேசி தயவுசெய்து போலிச்செய்திகளுக்கு ஆக்சிஜன் அளிக்க வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
மோடிக்கு நோபல் பரிசு என பரவிய வதந்தி - உண்மை என்ன? Asle Toje என்ன பேசினார்? | Fact Check
மோடிக்கு நோபல் பரிசு என பரவிய வதந்தி - உண்மை என்ன? Asle Toje என்ன பேசினார்? | Fact Checktwitter

அமைதிக்கான நோபல் பரிசுக்கு மிகப் பெரிய போட்டியாளராகப் பிரதமர் மோடி இருப்பதாக நோபல் பரிசு கமிட்டியின் துணைத் தலைவர் அஸ்லே டோஜே கூறியதாகத் தகவல் பரவியது. இதனிடையே இது குறித்து அவர் முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

இந்த செய்தியை நோபல் கமிட்டி துணைத்தலைவர் ஆஸ்லே டோஜே மறுத்துள்ளார். பிரதமர் மோடி குறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

ஏபிபி செய்தி நிறுவனத்துக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் அமைதிக்கான மிக நம்பகமான முகம் பிரதமர் நரேந்திர மோடி தான் என்று Asle Toje கூறியதாக நேற்று செய்திகள் வெளியானது. இதனை அவர் மறுத்து அதற்கான விளக்கத்தை அளித்திருக்கிறார்

இது தெடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், 'ஒரு போலி செய்தி ட்வீட் அனுப்பப்பட்டிருகிறது. அதை நாம் போலி செய்தியாக கருதவேண்டும். அதைப் பற்றி விவாதிக்க வேண்டாம். அந்த ட்வீட்டில் இருந்த தகவல்களை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன்' என்றார்.

“இந்தியாவிற்கு நான் அரசியல் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து அறிந்து கொள்ளவே வந்திருக்கிறேன். நோபல் கமிட்டியின் துணைத்தலைவர் நான்.

பொய்யான செய்தி, ட்வீட் ஒன்று பகிரப்பட்டு வருகிறது. அந்த செய்தியில் இருப்பது போன்று எதையும் நான் சொல்லியிருக்கவில்லை. அதைப்பற்றி மேலும் மேலும் பேசி தயவுசெய்து போலிச்செய்திகளுக்கு ஆக்சிஜன் அளிக்க வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோவை பத்திரிக்கையாளர் ராணா அயூப் பகிர்ந்து, ANIயிடம் இதற்கான விளக்கம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்

மோடிக்கு நோபல் பரிசு என பரவிய வதந்தி - உண்மை என்ன? Asle Toje என்ன பேசினார்? | Fact Check
தமிழ்நாடு : வட இந்திய தொழிலாளர்கள் மீது வன்முறை நடைபெற்றது உண்மையா? | Fact Check

நார்வேயைச் சேர்ந்த நோபல் கமிட்டியானது, அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவரை தேர்ந்தெடுக்கும் அமைப்பாகும்.

இந்த குழு தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், மோடி தொடர்பான செய்தி பரவி வருகிறது.

உலகில் அமைதியான சூழலை உருவாக்குவதற்கும் மோதல்களைத் தீர்ப்பதற்கும் சிறந்த பங்களிப்பைச் செய்தவர்களை அங்கீகரிக்கும் வகையில், அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

உலகின் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் இதுவும் ஒன்று. அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் மோடியின் பெயர் இதற்கு முன் பலமுறை முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மோடிக்கு நோபல் பரிசு என பரவிய வதந்தி - உண்மை என்ன? Asle Toje என்ன பேசினார்? | Fact Check
Indian Railways : 90 கன்டெய்னர்களுடன் புறப்பட்ட சரக்கு ரயில் காணாமல் போனதா? - Fact Check

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com