
பலருக்கு சுயிங்கம் மெல்லும் பழக்கம் இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் இதனை மென்றுகொண்டே இருப்பார்கள்.
சிறுவர்களை கவரவேண்டும் என்பதற்காக பல வண்ணங்களில், வடிவங்களில் சுயிங்கம் தயாரிக்கப்படுகிறது.
சுயிங்கம் அனைத்துமே சர்க்கரையை பயன்படுத்திதான் தயாரிக்கப்படுகிறது. இதனால் இதனை சர்க்கரை நோயாளிகள் மெல்லக்கூடாது என்பார்கள் ஆனால் அதற்கு மாற்றாக ‘சுகர் ப்ரி’ சுயிங்கமும் தயாராகிறது.
ஆனால் சுயிங்கம் சாப்பிடுவது அவ்வளவு நல்லதல்ல என பலர் சொல்லி கேள்விபட்டிருப்போம். உண்மையில் சுயிங்கம் மெல்லுவதால் சில நன்மைகள் இருக்கா?
சூயிங்கம் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க உதவுகிறது. இப்படி சுயிங்கம் மெல்லுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.
நீங்கள் சுயிங்கம் மெல்லும்போது, அது உமிழ்நீர் உற்பத்தியைத் தூண்டுகிறது. மேலும் இது உணவுத் துகள்கள் பற்களில் சிக்கி இருந்தால் அவற்றை அகற்றவும் உதவுகிறது. உமிழ்நீர் உற்பத்தி அதிகரிப்பது பல் சொத்தை மற்றும் ஈறு நோயைத் தடுக்க உதவும்.
சர்க்கரை இல்லாத சுயிங்கத்தை மெல்லும் போது அது உங்கள் வாயில் உள்ள பாக்டீரியாக்களை அகற்றுகிறது. இதன் மூலம் உங்கள் சுவாசத்தை புத்துணர்ச்சியடையச் செய்யும். புகைபிடித்தல் இறைச்சி போன்ற உணவுகளை உண்ட பின்பு வரும் நாற்றங்களை கட்டுபடுத்த இது உதவும்.
சூயிங்கம் உமிழ்நீர் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது, செரிமான அமைப்பைத் தூண்டுகிறது. வயிற்று அமிலத்தை நடுநிலையாக்குவதன் மூலம் நெஞ்செரிச்சலை போக்குகிறது.
சூயிங்கம் உடலில் ஒரு அமைதியான விளைவை ஏற்படுத்துகிறது, மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க உதவுகிறது. இது மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust